தண்ணீர் பற்றிய அரிய உண்மைகள்!

இப்பதிவில், தண்ணீர் பற்றிய அரிய உண்மைகளை நாம் அறிந்துகொள்ள முடியும். படித்து பயன் பெறுங்கள்.

இப்புவியையும், நம் உயிரையும் பிழைக்க வைத்து கொண்டிருக்கும் தண்ணீர் பற்றிய உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்! இந்த பதிவில், தண்ணீரை பற்றி அறியாத சில அரிய விவரங்களை படித்து அறிந்து கொள்வோம்.

உள்ளடங்கிய துணை தலைப்புகள்:

  • தண்ணீர் உருவாகிய விதம்
  • நீரின் தன்மை மற்றும் சிறப்பு
  • நீரின் சுழற்சி
  • மனிதர்களால் தண்ணீர் படும் பாடு
  • அப்படியா!!!

தண்ணீர் உருவாகிய விதம்:

Secrets of Water in Tamil language

மனிதன், தாயின் கருவில் உருவாகின்ற பொழுது தண்ணீர் குடத்தில் நீரால் சூழப்பட்டு பிறப்பதை போன்று, பூமியும் உருவாகும் பொழுது தண்ணீர் படலத்தால் சூழப்பட்டு இருந்தது. எனவேதான், முன்னோர்கள் முதுபெரும் மொழியாக சொல்லிவைத்தார்கள் “நீரின்றி அமையாது உலகு”.

இதுவரை நாம் பள்ளி பருவத்தில் படித்த “சூரியனில் இருந்து பிரிந்து வந்த ஒரு சிறிய நெருப்பு பந்துதான் பூமி, அது பல ஆண்டுகள் கழிந்து குளிர்ந்து தண்ணீர் உருவாகியது” என்கின்ற அறிவியல் பாடம் பொய் என்றும், “பூமி சூரியனில் இருந்து பிரிந்து வந்தது அல்ல, பூமியானது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருவெடிப்பின் (Big Bang) விளைவாக நேரடியாக உருவாகி அது முழுவதும் தண்ணீர் படலத்தால் சூழப்பட்டு இருந்தது. பின்பு தண்ணீர் படலம் பனிக்கட்டிகளாக உருமாறி, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பின்பு பூமி வெப்பம் அடைந்து பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்தன. அதன் விளைவாக சமுத்திரங்கள் உருவாகின, பின்பு கண்டங்களும் ஆறுகளும் உருவாகின. அதன் பின்புதான் தண்ணீர் ஜீவராசிகள், தாவரங்கள், விலங்குகள் உருவாகின. இறுதியாக இவைகளனைத்தையும் ஆண்டு கொள்ள மனிதன் உருவாகினான்.” என்ற உண்மையை ஆஸ்திரேலியா-வின் சிட்னி நகரத்தை சேர்ந்த திரு. நிக்கோலஸ் பிலமென்ட் என்கின்ற புவியியல் ஆராச்சியாளர் தலைமை கொண்ட குழு கண்டறிந்துள்ளது.

நீரின் தன்மை மற்றும் சிறப்பு:

Important points of Water in Tamil language

1. ஒரு துளி நீரானது, பில்லியன் கணக்கான மூலக்கூறுகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு மூலக்கூறும் ஒரு ஆக்ஸிஜன் மற்றும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஆகியவற்றால்ஓர் வலுவான ஒருங்கிணைந்த பிணைப்புகள் மூலம் கட்டப்பட்டுள்ளன. ஆகவே, வேதியியல் பெயராக “H2O” என்று அழைக்கப்படுகிறது.

2. நீரின் மூலக்கூறுகள் மிகச்சிறிய வடிவில் இருப்பதினால் சக்தி வாய்ந்த நுண்ணோக்கி மூலமாக கூட காண இயலாது.

3. புவியின் நிலப்பரப்பு 70% நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் 90% மற்ற தாதுக்கள் நிறைந்த உப்பு நீராகும். 1% நீர் மட்டுமே நம் குடிப்பதற்கு ஏதுவான சுத்தமான நீராகும்.

4. சுத்தமான நீர் சுவை, நிறம் மற்றும் வாசனையற்றது.

5. நீரானது திடம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளில் பரிணமிக்கின்றன.

6. பிரபஞ்சத்தில் அபரிமிதமாக காணப்படும் மூலக்கூறுகளில் நீரின் மூலக்கூறுகள்தான் மூன்றாம் இடத்தில உள்ளன.

7. மனித உடலானது சராசரியாக 70 சதவிகிதம் நீரால் ஆனது. இரத்தம் 83 சதவிகிதமும், மூளை 70 சதவிகிதமும், நுரையீரல் 90 சதவிகிதமும் நீரால் ஆனது. ஆகவே, ஒரு நாளைக்கு சராசரியாக 2.5 லிட்டர் தண்ணீர் பருகுவது அவசியம்.

8. உடலிற்கு நன்மை தரக்கூடிய தாதுக்கள் கலந்திருக்கும் இயற்கை குடிநீரை முறையாக பருகும் பொழுது, உடலிற்கு தேவையான சத்துக்கள் சென்றடைந்து, உடல் ஆரோக்கியம் பெறுகின்றது.

9. பூமியில் நீர் இல்லாவிடில் நிலவை போல் காட்சியளிக்கும்.

10. மனிதன் மற்றும் மற்ற உயிரினங்களால் பல நாட்கள் உணவின்றி வாழமுடியும். ஆனால் நீரின்றி சில நாட்கள் கூட வாழ முடியாது.

நீரின் சுழற்சி:

Earth Water Cycle in Tamil language

நீர் வெப்பத்தால் ஆவியாகி, மேலே சென்று மேகமாகி, குளிர் காற்று பட்டு திரும்பவும் பூமிக்கே மழையாக பொழிகிறது. இது ஒரு முடிவில்லா சுழற்சி ஆகும்.

மனிதர்களால் தண்ணீர் படும் பாடு:

Water polution in Tamil Language

இயற்கை மனிதனுக்கு கொடுத்த விலைமதிக்க முடியாத தண்ணீரை, மனிதன் முறையாக கையாள தெரியாமல் பஞ்சமும் நோய்நொடியும் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்கிறான்.

1. இயற்கை சத்துக்கள் கலந்த ஜீவன் நிறைந்த குடி தண்ணீரை, வியாபார ரீதியாக செயற்கை சுத்திகரிப்பு கருவிகள் மூலம் சத்துக்களை நீக்கி ஜீவனற்றதாக மாற்றப்படுகிறது. இதனால் உடலுக்கு தேவையான இயற்கையாக கிடைக்கூடிய சத்துக்கள் முழுமையாக கிடைக்கப்படுவதில்லை.

2. மழை பொழியும் பொழுது, வீட்டை சுற்றி அகற்றப்படாமல் இருக்கும் குப்பை கூளங்களில் மழை நீர் தேங்குவதால், அவற்றில் கொடிய கிருமிகள் உருவாகி வளர ஆரம்பிக்கின்றன. இதனால் நீரின் மூலமாக பரவக்கூடிய கொடிய நோய்கள் ஏராளம்!

3. தண்ணீரினை இயற்கையான வழியில் சுத்திகரிக்கும் முறை பற்றிய அறியாமையினால், தண்ணீரானது வியாபாரமாக்கப்பட்டு அதன் இயற்கை தன்மையை இழக்கிறது.

அப்படியா!!!

First Boiling Water in tamil language

அறிவியலில் சிறந்தவர்கள் எனப்போற்றப்படும் எகிப்தியர்கள்தான் முதன் முதலில், அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்பதாகவே நீரின் தன்மையை அறிந்து, அதனை சரியான கொதிநிலையில் கொதிக்கவைத்து பதப்படுத்தி அருந்தியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *